சுவிஸில் காணாமற்போன ஈழத்தமிழர்! கவலையில் உறவினர்கள்

சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழரை காணவில்லையென அவரது உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வன் -ரமேஸ்வரன் (வயது 43 ) என்ற இளைஞரே காணாமல் போனவராவார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இவர் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் சுவிஸ் பாசெல் மாநிலத்தில் வசித்து வந்த நிலையிலேயே கடந்த ஒன்றரை மாதங்களாக காணாமல் போயுள்ளார்.

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டநிலையில் அவர் சுவிஸ் அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது சிக்கலில் மாட்டுப்பட்டுள்ளாரா என்பது தெரியாமல் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் உறவினர்களுக்கு தெரிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது