சுற்றுலா தளமாகின்றது யாழ். மண்டைதீவு

யாழ்ப்பாணம், மண்டைதீவில் ஒரு பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வலயமாக்கப்படவுள்ளது. இதன்படி இங்குள்ள கரையோரத்தை அபிவிருத்தி செய்து, படகு சவாரி போன்றவற்றை ஒழுங்குபடுத்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதலில் உள்ளுர் சுற்றுலாதாரிகளை அனுமதித்து, எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாதாரிகள் இங்கு அனுமதிக்கப்படுவர். இதனால் ஆழம் குறைந்த யாழ்ப்பாணக் கடலநீரேரியிலுள்ள பவளப் பாறைகள், கடற்தாவரங்கள் மற்றும் மீனினங்கள் போன்றவற்றையும், குடாநாட்டின் இயற்கை வனப்பையும் கண்டு ரசிக்க முடியும் என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.