சுமந்திரன் தோற்கடிக்க முடியாதவரா?–பாலன்

இலங்கை அரசின் நோக்கத்தை சுமந்திரன் பூர்த்தி செய்து வருவதால் எப்படியாவது அவரை வெற்றி பெற்றதாக இலங்கை அரசு அறிவிக்கும் என சிலர் கூறுகிறார்கள்.
சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டால் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும். எனவே இந்திய உளவுத்துறை எப்படியாவது சுமந்திரனைக் காப்பாற்றும் என வேறு சிலர் கூறுகின்றனர்.
சுமந்திரன் வடமராட்சியைச் சேர்ந்தவர். எனவே அந்த மக்கள் மண்ணின் பாசத்தில் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என இன்னும் சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் வரலாற்றை கொஞ்சம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். ஆனானப்பட்ட அமிர்தலிங்கத்தையே தோற்கடித்த தமிழ் மக்களுக்கு சுமந்திரன் எம்மாத்திரம்?
உடுப்பிட்டி சிங்கம் என அழைக்கப்பட்டவர் சிவசிதம்பரம். அவரையே வடமராட்சியில் உடுப்பிட்டி தொகுதி மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.விகிதாசாரத் தேர்தலை அறிமுகப்படுத்தி இதில் யாரும் 100 வீத வெற்றி பெற முடியாது என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா கூறினார்.
அவர் அதை கூறிய முதல் மாவட்டசபைத் தேர்தலிலேயே 100 வீத வெற்றியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்தவர்கள் யாழ் மாவட்ட மக்கள்.
எனவே மக்கள் முடிவு எடுத்துவிட்டால் அப்புறம் இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய உளவுப்படையே நினைத்தாலும் சுமந்திரனை காப்பாற்ற முடியாது.
மக்கள் மீது நம்பிக்கை வைப்போம்.
மக்கள் அற்புதம் நிகழ்த்துவார்கள்.
குறிப்பு – ஒரேயொரு விடயம் மட்டும் சுமந்திரனுக்கு வாய்ப்பாக இருக்கிறது. அது என்னவெனில் சுமந்திரனுக்கான ஒரு பலமான மாற்று இன்னும் வைக்கப்படவில்லை.