சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 54 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது சிறைச்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்தை 709 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் இலங்கையில் பல்வேறு இடங்கள் தனிமைபடுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ள நிலையில், இத் தொற்றினால் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.