சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார்.

எனினும் இவற்றில் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும் பாதிக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளாகும்.

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை, பிள்ளைகளை பொறுப்புடன் பாதுகாப்பாகவும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

தற்போது சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில் அவர்களது மனநிலை குறித்த புரிதலை பெரியோர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.