சிறீ லங்கன் எயார் லைன்ஸை வாங்க 6 நிறுவனங்கள் முயற்சி

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான சிறீ லங்கன் எயார் லைன்ஸை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விவரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, எயார் ஏசியா கன்சல்டிங், தர்ஷன் எலைட் இன்வெஸ்ட் மன்ட், எவ். ஐ. ரி. எஸ் ஏவியேசன் லிமிற்றட், ஷெரிஷா ரெக்னோலஜி பிறைவேட் லிமிற்றட், ட்ரெசர் றீ பப்ளிக் கார் டியன்ஸ், ஹேலிஸ் பிறைவேட் லிமிற்றட் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

ஹேலிஸ் நிறுவனம் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக குழு என்பதுடன், இதனை கட்டுப்படுத்தும் சக்திமிக்க பங்குதாரராக தம்மிக பெரேரா உள்ளார். இவர் வசம் 51 வீத பங்குகள் உள்ளன என் பது குறிப்பிடத்தக்கது.