சிறீலங்கா சுற்றுலாத்துறையின் இழப்பீடு 800 மில்லியன் டொலர்கள்

சிறீலங்காவின் சுற்றுலாத்துறை கடந்த வருடம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அதனால் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரு-மானத்தை சிறீலங்க இழந்துள்ளதாகவும் சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 4,381 மில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறை கடந்த வருடம் 3,592 மில்லியன் டொலர்களையே பெற்றதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 2.3 மில்லியன் பயணிகள் வருகைதந்த போதும், 2019 ஆம் ஆண்டு 1.9 மில்லியன் பயண-pகளே வருகைதந்ததாகவும், இது 18 விகித வீழ்ச்சி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.