சிறீலங்கா அரசின் நிதியை பெற தகுதி உடையவர்களின் விபரம்

கொரோனா வைரசிஸ் இன் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறீலங்கா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மக்கள் அதிக நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் அவர்களுக்கு உதவித் தொகையை வழங்க சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

சிறீலங்கா அரசின் நிதியை (5,000 ரூபாய்கள்) பெற தகுதி உடையவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

1.நிரந்தர வருமானம் பெறும் அரசஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவர்கள்.
2. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.
3. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை
சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காதவர்கள் (Waiting List)
4. முதியோர்கள் (70 வயதினை
உடையவர்கள்)
5. 70 வயதினை பூர்த்தியடைந்தும் இதுவரை
முதியோர் கொடுப்பனவிற்கான
முத்திரையினை பெறாதவர்கள்.
( Waiting List )
6. ஊனமுற்றவர்கள் ( Disables )
7. ஊனமுற்றவராயினும் இதுவரை
கொடுப்பனவினை பெறாதவர்கள்.
( Waiting List )
8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு
விண்ணப்பித்து கிடைக்காதவர்களும்
( Waiting List )
9. பாரிய நோய்த்தாக்கத்திற்கு
உள்ளானோர்கள்.
eg. Kidney

Note: ஒரு நபர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர் அத்துடன் அந் நபர் முதியோர் கொடுப்பனவினை பெறுகின்றவராயினும் அல்லது பெற தகுதியுடையவராயினும் அவர் 2 பெறுவனவினையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார்.
5000 + 5000 = 10,000/=

எனவே, இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை சந்தித்து இக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளுங்கள்.

நிவாரண நிதி கிடைக்காதவர்கள் அழையுங்கள் 011 4354550