ஐ.பி.சியின் சிங்கள இணையம் தெரிவித்தது என்ன?

மே  18ம் திகதி முள்ளிவாய்க்கால் தினத்தன்று IBC தமிழின் சிங்கள சேவை ககன gagana.lk வெளியிட்ட செய்தியின் தமிழ் மொழியாக்கம் :-

சிறீலங்கா காவல்துறையினர்  மீது குற்றச்சாட்டு…..

சமூக வலைத்தளங்களில்  விடுதலைப்புலிகளை முன்னிலைப்படுத்துகிறவர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை  வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பை உயர்த்தி முன்னிறுத்தி வரும் குழுவொன்று   மூதூர் பிரதேசத்தில் இயங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக மூதூரில் வாழும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் போன்றே இந்தக் குழு உறுப்பினர்கள் செயல்படுவதாகவும்  அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  “அவர்கள் தமது நடவடிக்கைகள்  பற்றி முகநூலிலும் பகிரங்கமாக போஸ்ட் போடுகிறார்கள் ஆனாலும் கூட யாரும் அவர்களை தடுப்பதில்லை.

அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக முறைப்பாடு செய்தும் போலீசார் இது பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வந்து அறிக்கை எழுதிக் கொண்டு செல்வார்கள் அவ்வளவுதான்'” என்றும்  அவர் தெரிவித்தார்