சிறீலங்காவில் 72ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

சிறீலங்காவில் இதுவரை மொத்தமாக 72ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 375ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் உலகளவில் 107,947,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,367,196 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,871,294 ஆக அதிகரித்துள்ள நிலையில், 155,360 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.