சிறீலங்காவில் பல ஆடைத் தொழிற்சாலைகளை மூட தீர்மானம்

கொக்கலையில் அமைந்துள்ள பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது, பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் அனைத்து கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டு நாயக்க மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள்ள பல ஆடை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என முத லீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது, நாட்டின் சூழ்நிலை கருத்திற் கொண்டு கொவிட் -19 பரவு வதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் செய்தி தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.