சிறீலங்காவில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 863 ஆக அதிகரிப்பு

நேற்று (10) இரவு வரையில் சிறீலங்காவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று அங்கு 16 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் சிறீலங்காவில் 9 பேர் இந்த நோயால் மரணமடைந்துள்ளனர்.