சிறீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – தென்னிலங்கையில் அதிக பாதிப்பு

சிறீலங்காவில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 48 மணிநேரத்தில அங்கு 65 இற்கு மேற்பட்ட சிறீலங்கா கடற்படையினரும் 66 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவின் வெலிசர கடற்படை முகாம் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த 4000 கடற்படையினரும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிசரை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு அண்மையாக வாழும் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். எனினும் மக்களை அச்சமடைய வேண்டாம் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.