சிறீலங்காவின் வருமானம் வட்டி கட்டவே போதுமானது – சம்பிக்க

தற்போதைய புதிய அரசின் பொருளாதார கொள்கையில் கிடைக்கும் வருமானம் சிறீலங்கா அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்டுவதற்கே போதுமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கா கடந்த வியாழக்கிழமை (27) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால நிதி அறிக்கை விவாதத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் வரலாற்றில் இது தான் முதல் தடவை வட்டிப் பணம் வருமானத்திற்கு இணையாக உயர்ந்தது. இந்த நிலைமையானது அரச பணியாளர்களின் சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.