சிறீலங்காவின் பொருளாதாரத்தை காப்பாற்ற சீனா உறுதி

கொரோனா வைரசின் தாக்கதால் சீரழிந்துள்ள சிறீலங்காவின் பொருளாதாரத்தை காப்பாற்ற சீனா உறுதியழித்துள்ளது.

சீனா அரசு மட்டுமல்லாது, சீனாவில் உள்ள முன்னனி வங்கிகளும் சிறீலங்காவிற்கு உதவிகளை மேற்கொண்டு அதன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்னவந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனா தூதரகத்தின் பிரதித் தூதுவர் கூ வேய் தெரிவித்துள்ளார்.

நேற்று (29) சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவிற்கும் சீன தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடிகளில் போது சிறீலங்கா சீனாவுக்கு துணையாக இருந்தது எனவே நாம் சிறீலங்காவுக்கு துணையாக இருப்போம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.