சிறீலங்காவின் சுகாதார அமைச்சருக்கு கோவிட்-19 தொற்று

சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சிக்கு கோவிட்-19 நோயின் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது கொரோனோ நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து வருகின்றது நேற்று (22) முடிவடைந்த 24 மணி நேரத்தில் அங்கு 784 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.