சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 தை 3 வரை ஒத்திவைப்பு; சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு

நாடாளுமன்றை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை அரசுத்தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

அதன்கடி பாராளுமன்றத்தை 2020 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 2020 தை 3 ஆம் திகதி காலை புதிய அரசுத்தலைவரின் உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.