சிறிலங்காவில் அமெரிக்கா தளம் நிறுவும் நோக்கம் இல்லை – அலெய்னா

சிறிலங்காவில் படைத் தளத்தை நிறுவும் நோக்கமோ திட்டமோ அமெரிக்காவிற்கு இல்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூரவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட சோபா உடன்பாட்டு வரைபை, கொழும்பு ஊடகங்கள் பலவும் வெளியிட்டமையினால் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவிற்கும், சிறிலங்காவிற்குமிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமான “சோபா“வில் காணப்படும் சில சரத்துக்கள் இலங்கையின் இறையாண்மைக்கு பாதகமாகக் காணப்படுகின்றன என்று ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்தே இந்தத் தகவலை, அமெரிக்க தூதுவர் வெளியிட்டிருந்தார்.

இது ஒரு தவறான தகவலாகும். அமெரிக்காவிற்கு இப்படியானதொரு திட்டமோ நோக்கமோ கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு உடன்பாடும் சிறிலங்காவின் இறையாண்மையைப் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.