சமுர்த்தி பயனாளிகளுக்கான தகவல்

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்.மாவட்டத்தில் 76048 சமுர்த்தி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அலுவலகப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் ஆ.பீ.பீ.திலகசிறியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ் உலர் உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கைகளை சமுர்த்திப் பிரிவினர் எடுத்துள்ளனர்.

இதன்படி பலநோக்க கூட்டுறவுச் சங்க கிளைகள் ஊடாக வழங்கப்படவுள்ளது. சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவு பெறும் பயனாளிகளில்

இரு அங்கத்தவர்களுக்கு 1,500 ரூபாவும், மூன்று அங்கத்தவர்களுக்கு 2,500 ரூபாவும், நான்கு அங்கத்தவர்களுக்கு 3,500 ரூபாவும் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.