சட்டத்தை மீறிய 1589 பேர் கைது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உட்பட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று இரவு 10 மணி ஆன காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.