கோவிட்-19 – 40,000 இற்கு மேற்பட்டவர்கள் மரணம்

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (31) தெரிவித்துள்ளது. 820,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 174,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 12,428 பேர் மரணமடைந்துள்ளதுடன், இன்று 837 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 15,729 குணமடைந்துள்ள போதும், அங்கு 66 வைத்தியர்கள் மரணமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரையிலும் 8,189 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 849 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர். 94,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 3,606 பேர் மரணமடைந்துள்ளதுடன், 181,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகரத்தில் மட்டும் 1,550 பேர் மரணமடைந்துள்ளதுடன், 77,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் 3,523 பேர் மரணமடைந்துள்ளர். இன்று அங்கு 499 பேர் பலியாகியுள்ளனர். 52,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 393 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு இதுவரை 1,808 பேர் மரணமடைந்துள்ளதுடன், 25,000 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.