கோவிட்-19 – சிறிலங்கா வைத்தியசிலையில் இட நெருக்கடி

சிறீலங்காவில் திடீரென அதிகரித்துவரும் கொரோனா நோயினால் அதற்கு சிகிச்சை அளித்துவரும் தொற்று நோய் வைத்தியசாலையான ஜ.டி.எச் இல் தற்போது இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு தங்போது 140 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதுடன், 10 பேர் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வைத்தியசாலையில் 120 நோயாளருக்கே இடமுண்டு என வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரமா தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறீலங்கா கடற்படையினரிடம் அதிகரித்து வரும் நோய் காரணமாகவே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.