கொலையாளிகள் வெளியில் அரசியல் கைதிகள் சிறையில் – அரசை சாடுகிறார் கஜேந்திரன்

சாட்சியங்களே இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்துள்ள இந்த அரசுகொலை யாளி பிள்ளையானை விடுதலை செய்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “பிள்ளையான் கொலையாளி. சந்தேக நபருக்கு எதிராக சான்று இல்லை என இந்த அரசின் காலத்தில் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவெரு சாட்சியமும் இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. இதனால்தான் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை நாம் ஐ.நா. வரை சென்று கூறுகிறோம்” என்றார்.