கொரோனா வைரஸ் – மரணமடைந்தோர் எண்ணிக்கை 490ஆக உயர்வு

சீனாவில் உருவாகி உலகம் எங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு இதுவரையில் 490 பேர் மரணமடைந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் சீனாவிலும், ஒருவர் கொங்கொங் இலும் மற்றுமொருவர் பிலிப்பைன்ஸ் இலும் மரணமடைந்துள்ளனர்.

அதேசமயம், 24,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24,292 பேர் சீனாவிலும் ஏனையவர்கள் ஏனைய நாடுகளிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, சுற்றுலாப் பயணக் கப்பலில் யப்பானுக்கு சென்றவர்களை பரிசோதனை செய்ததில் 10 பயணிகளுக்கு வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கப்பலில் சென்ற 3700 பேரில் 272 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று நோய் கண்டறியப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.