கொரோனாவுக்கு நேற்று 24 பேர் பலி! 2,269 பேருக்குப் புதிதாகத் தொற்று

இலங்கையில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 269 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதேவேளையில் நேற்றைய தினம் 24 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் தொகை 892 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனாத் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 802 பேர் குண மடைந்துள்ளனர் எனவும், 26 ஆயிரத்து 126 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.