கொரனா சந்தேகத்தில் அரச அலுவலர் அனுமதி!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரனாவைரஸ் தாக்கியுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வ்வுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் இன்றுகாலை அம்புலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா பொது வைத்தியசாலையின் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் இரத்த மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்களிற்காக அனுப்பிவைத்துள்ளனர்.