கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நினைவிடத்தில்  அனுஸ்டிக்கப்பட்டது.

IMG 8635 கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்

குறித்த நினைவேந்தலில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின், உறவுகள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

IMG 8634 கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் கொக்குவில் பிரம்படி பகுதியில் வைத்து 50 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.