கைதிகளை விடுவிக்குமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா கோரிக்கை

கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு இலகுவில் உட்படும் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மிச்செல் பசலெற் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை பாதுகாக்க வேண்டிய கடமை நாடுகளுக்கு உண்டு. இந்த வரைசின் தாக்கம் சிறை, பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தடுப்புக்காவல் முகாம்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது எனவே இந்த இடங்களில் அதிகளவானோர் தடுத்துவைக்கப்படுவது ஆபத்தானது.

எனவே ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் பாதிப்புக்கு இலகுவில் உட்படுபவர்கள் மற்றும் சிறுகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.