கிழக்கில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தபக்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் எம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இன்று (3) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர் அடங´கலாக மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களது உடல் நிலையில் மாற்றம் காணப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாகவம் தெரிவித்தார் 96 படுக்கைகளை கொண்ட விடுதி ஒன்று மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதர அமைச்சு மேற்கொண்டுள்ளது என்றம் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேக நபர்களாக 36 நபர்கள் இது வரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர் ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டு கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிசை அளிக்கப்பட்டுவருகின்றது.

சமூக இடைவெளியினை கண்டிப்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் முக கவசம் வெளியில் செல்கின்றபோது கண்டிப்பாக அணிவதும் அவசியமானதாகும் கொரோனா தாக்கிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அதிகமானோர் முககவசங்களையும் சமூக இடைவெளிகளை முன்னெடுத்ததாகவும் கைகளை நன்றாக கழுவுவதையும் கடைப்பிடித்தமையும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவர முடிந்ததாக தரவுகள் வெளியாகிதாக வைத்திய நிபுணர் சுந்தரேசன் தெரிவித்தார்.