கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் கொரோனா தொற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிழக்கின் அக்கரைபற்று பகுதியில் தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அக்கரைப்பற்று பகுதியில் 11பேரும் அட்டாளைச்சேனை பகுதியில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று களுவாஞ்சி குடியில் பொலிஸ் உத்தியோகத்தரும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.