கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் ‘சுனாமி பேபி’

கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.

இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.

உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார்.

IMG 0059 கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் 'சுனாமி பேபி'

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு மிகவும் உற்சாகத்துடன் தோற்றினார்.

இன்று காலை தனது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ஆலய வழிபாட்டினை பூர்த்திசெய்து மிகவும் உற்சாகத்துடன் தான் பரீட்சைக்கு தோற்றுவதாக அவர் தெரிவித்தார்.

IMG 0047 கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் 'சுனாமி பேபி'

சுனாமி அனர்த்ததின்போது கண்டெடுக்கப்பட்ட அபிலாஸ் தனது குடும்பத்தினை கண்டுபிடிப்பதற்காக நடைபெற்ற பரீட்சையில் சித்திபெற்றதைபோன்று தனது வாழ்கையின் பரீட்சையிலும் இன்று களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.