காஸாவில் உதவி பெறச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 45 பேர் பலி!

காஸாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் உதவிகள் பெறச் சென்ற மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ”முதலில் இஸ்ரேலின்  ஆளில்லா விமானங்கள்,  மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. சில நிமிடங்களில், அந்நாட்டின் டாங்கிகள் பல குண்டுகளை வீசி அங்குள்ளவர்களை கொன்றன” என காசா சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் இராணூவம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.