காணாமல் போன அருந்தவச்செல்வன்! யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ். அம்பன், குடத்தனையை பிறப்பிடமாகவும் குடத்தனை கிழக்கில் வசித்து வந்தவருமாகிய செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த 09/03/2018 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

இவரை இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் தேடி வருகின்றனர்.

இவர் காணாமல் போனது தொடர்பில் 10/03/2018 ஆம் அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் காணாமல் போன தினத்திலிருந்து ஒரு வார காலம் வரை தொலைபேசி இயங்கியிருக்கிறது. பலர் அதில் பேசியிருக்கிறார்கள்.

ஆனால் காணாமல் போன நபர் பேசவில்லை. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் தெரியப்படுத்தப் பட்டிருந்தும் பொலிஸார் அதில் அக்கறை கொள்ளவில்லை என காணாமல் போன நபரது உறவுகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவரான செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை 0771154704 அல்லது 0761660414 தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.