காணாமல் போனோர் அலுவலகத்துக்கு மூடுவிழா? கோட்டா அரசு ஆலோசனை

முன்னைய அரசால் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.

காணாமற்போனோர் பணியகச் சட்டம் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள நீதியமைச்சின் அதிகாரியயாருவர் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அரசு மீளாய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தை அரசு தொடருமா எனத் தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி உரியமுறையில் மீளாய்வை மேற்கொண்ட பின்னர் அது குறித்து தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் பணியகச் சட்டம் முன்னைய அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் காணாமற்போனோர் பணியகத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது.

எனினும் அச்சமயம் எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசில் இடம்பெற்றிருந்தவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்திருந்தனர்.