காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிறிஸ்மஸ் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

கிறிஸ்மஸ் தினத்தில் உலகவாழ் கிறிஸ்தவர்கள் சிசு பாலன் பிறப்பை கொண்டாடும் நிலையில் தமது பாலகர்களை தாம் தேடி வருவதாக தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்னால் 1040ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போராட்ட கொட்டகை முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் படத்தை நத்தார் தாத்தா போன்று வடிவமைத்து, நத்தார் வாழ்த்துக்கள்- அடுத்த நத்தாருக்குள் தீர்வு என்ற வாசகத்தை எழுதி பதாதையொன்றை ஏந்தியிருந்தனர்.

மேலும், ‘துப்பாக்கிகளை காட்டி கைகளை உயர்த்திப் பிடிக்கச் சொல்லி கூட்டிச் சென்ற அண்ணா எங்கே, பச்சை உடையில் இரும்பு கம்பியால் தாக்கி வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட அப்பா எங்கே, கோட்டாபய மாமா – எங்கே ஆசை மாமா, மைத்திரி மாமா வந்தீங்க பொறுப்பு கூறாமல் சென்றீங்க’ என எழுதப்பட்ட அட்டைகளை தங்கியவாறும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, எல்லோரும் பாலன் பிறப்பு நாளை கொண்டாடும் இந்த வேளையில் தாம், பிறந்து தொலைந்த தமது பிள்ளைகளுக்காக 10 வருடங்களாக போராடி வருகின்றோம்.

எங்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளனர்.

0001 1 காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிறிஸ்மஸ் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 0002 காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிறிஸ்மஸ் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 0003 காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிறிஸ்மஸ் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 0004 காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிறிஸ்மஸ் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்