கர்நாடக மாநிலம் சிவமோகா (ஷிமோகா) மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரி அருகே ஏற்பட்ட வெடிச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவின் ஹுனாசோடி என்ற ஊரில் உள்ள இரயில்வே கல் உடைப்புத் தளத்தில் ஏற்பட்ட இந்த டைனமைட் வெடிச் சம்பவத்தில் குறைந்தது 8 பேர் இறந்துள்ளதாக ,பலர் காயமடைந்துள்ளதாகவும் அம் மாவட்ட ஆட்சியர் கே.பி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சிவமொக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்’ என்று கூறி உள்ளார்.