கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களை நினைவு கூர்ந்த மக்கள்

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகள், இந்தியா மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள்  வாழும் நாடுகளிலும் மாவீரர் எழுச்சி நாள் நினைவு கூரப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தால் மாவீரர் நாள் நினைவு கூரல், ஒரு சலுகையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த ஆண்டு அரசாங்கம், நீதி மன்றங்கள் ஊடாக தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கு ஓர் தடையாக அமைந்தது.

KAJEEBAN

மேலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருந்ததுடன்,   பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பிபிசி

இந்நிலையில், தமிழர் தாயகம் முழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, தமிழ் அரசியல் கட்சிகள், பொது மக்கள் என அனைவரும் தமது வீடுகளில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நினைவு

அதே போல் புலம் பெயர் மற்றும் தமிழகத்தில் உள்ள மக்களாலும் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது.