கடலில் எண்ணெய் கலந்த விவகாரம் – நஷ்டஈடு செலுத்துமாறு நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளருக்கு உத்தரவு

3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறு நியூ டயமண்ட் (New Diamond)  கப்பல் உரிமையாளருக்கு சட்டமா அதிபர்  உத்தரவிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எண்ணெய் கசிவினால் சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு 3.423 பில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு நியூ டயமண்ட் கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகளுக்குச் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

நியூ  டயமண்ட்  கப்பலின் இலங்கையிலுள்ள நிறுவனத்திற்குச் சட்ட மா அதிபரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகச் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.