கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும் முகமாக கடன் மறுசீரமைப்பை வழங்குவதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வங்கி 4.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன் தவணையை மறுசீரமைத்துக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சு நேற்று (11) தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த முடிவு மிகப்பெரும் முன்னேற்றம், இந்த நடவடிக்கை மூலம் இலங்கை அனைத்துலக நாணயநிதியத்தின் இரண்டாவது தவணைப் பணமான 334 மில்லியன் டொலர்களை பெறமுடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.