ஒன்றுகூடல்கள் வட மாகாணத்தில் தடை; முப்படைகளுக்கு உத்தரவு

வடக்கில் அவசியமற்று கூட்டம் கூடுவதை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று மாலை அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த பல்வேறு கெடுபிடிகள் பொலிஸார் மற்றும் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோவிட் – 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவசியமற்ற ஒன்றுகூடல்களைத் தடுக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.