ஐ.நா அமைதிப்படையில் சிறீலங்கா படையினருக்கு அங்கீகாரம் – தமிழ் மக்கள் வேதனை

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் சிறீலங்கா படையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள செயல் உலகத் தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிககை மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் மீதான போரில் சிறீலங்கா படையினர் பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருநததாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

சிறீலங்கா படையினரின் பல தளபதிகள் மீது அனைத்துலக நாடுகளில் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை எல்லாம் புறம்தள்ளி தென்சூடானில் அமைதிப் பணிகளில் ஈடுபடுவதற்காக 61 சிறீலங்கா இராணுவத்தினரை ஐ.நா மீண்டும் அழைத்துள்ளது.

ஐ.நாவின் அழைப்பை ஏற்று 11 அதிகாரிகள் உட்பட 61 சிறீலங்கா படையினர் இன்று (03) தென்சூடானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.