எமது கோரிக்கைகளுக்கான பதிலைப் பொறுத்தே பதில் நடவடிக்கை – விக்கினேஸ்வரன்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் எமது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம். நாம் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் அவர்கள் தரும் பதிலைப் பொறுத்தே எமது நடவடிக்கைகள் அமையும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளால் இந்த கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது கோரிக்கைகள் தொடர்பில் மூன்று பிரதான அரச தலைவர் வேட்பாளர்களுடனும் நேரிடையான விவாதத்திற்கும் நாம் தயாராக உள்ளோம்.

இதனிடையே, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் இணைந்து அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளர்களு ஆதரவுகளை வளழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.