எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக 4 வர்த்தமானி அறிவித்தல்கள்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னப்பிரியவின் கையொப்பத்துடன், நேற்றிரவு (03) 4 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலின் போது ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்த வர்த்தமானியும்,

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானியும்,

சுயேட்சைக் குழுக்கள் செலுத்தப்பட வேண்டிய கட்டப்பணம் குறித்தும் வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கமைவாக வேட்புமனுக்கள் மார்ச் 12ஆம் திகதி தொடக்கம் பொறுப்பேற்கப்படவுள்ளது. பொதுத் தெர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.