ஊழல் அற்ற அதிகாரிகள் தேர்வில் தேர்வாகியுள்ள வைத்தியர் சத்தியமூர்த்தி

இலங்கையில் ஊழல் அற்ற அதிகாரிகள் தேர்வில் தமிழ் அதிகாரியாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் 2015இல் யாழ்ப்பாணம் வைத்தியசாலையை, அடிப்படை வசதிகள் இல்லாத வேளையில் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் உழைப்பால் இன்று யாழ். வைத்தியசாலை தரமுயர்ந்து காணப்படுகின்றது.

கடந்த 06ஆம் திகதி முடிவடைந்த, இலங்கையில் ஊழலற்ற நிர்வாகத்திற்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டார்.

நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வைத்தியர் சத்தியமூர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.