உலக சுகாதார ஸ்தாபனத்தினுடைய தென்கிழக்காசிய பிராந்திய குழுவினது 78வது உச்சிமாநாட்டை நடத்துவதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, குறித்த அமர்வில் 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு, சுகாதார ரீதியாக பிராந்திய அடிப்படையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.