உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சி.சி.ரி.வி காட்சிகளை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்கள் கூடி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் அடங்கிய சி.சி.ரி.வி காட்சிகளைக் கொண்ட 2 இறுவட்டுக்களை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீர்கொழும்பு ஹோட்டல் முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜம்மாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் தாக்குதல் தொடர்பில் குறித்த ஹோட்டலில் கலந்துரையாடியதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

( தகவல் திணைக்களம்)