ஈ.பி.டி.பி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா குகனேஸ்வரன்

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வில் இவர்  ஈ.பி.டி.பி கட்சி செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

1994ஆம் ஆண்டு   ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் இம்முறை ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன், வவுனியா நகர பொது சுகாதார பரிசோதகராக நகரசபையில் கடமையாற்றிய சி. கிரிதரன் ஆகியோரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.