ஈஸ்டர் தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஏழு மணி நேரம் சாட்சியமளித்த பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் நேற்று முதல் தடவையாக சாட்சியமளித்தார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்). அவரின் நேற்றைய சாட்சியம் சுமார் ஏழு மணி நேரம் நீடித்தது.

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானை இந்த விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகள் ஆணைக்குழுவுக்குக் கூட்டிவந்துபின்னர் அழைத்துச் சென்றனர்.