ஈழத் தமிழர்களை அழித்தவர்கள் காங்கிரஸ் வைகோ சாடல்

ஈழத் தமிழர்களை படுகொலை செய்து ஒரு இனத்தையே அழித்த பாவிகளான காங்கிரஸ் காரருக்கு மன்னிப்பே கிடையாது என ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்து ஒரு இனத்தையே அழித்த பாவிகள் இந்த காங்கிரஸ்காரர். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

தி.மு.க உறுப்பினர்களும், ஸ்டாலினுமே என்னை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தயவினால் நான் அங்கு செல்லவில்லை. செல்லவும் மாட்டேன் என அவர் கூறினார்.