மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் அதிக அழுத்தம் கொடுக்க அழைப்பு விடுக்கும் அதே சமயம், இஸ்ரேல் காசாவில் “இனப்படுகொலை” செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கில் தலையிடப் போவதாக பிரேசில் கடந்த புதன்கிழமை (23) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை பார்த்துக் கொண்டிருக்க, சர்வதேச சமூகம் செயலற்ற நிலையில் இருக்க முடியாது. தார்மீக குழப்பம் அல்லது அரசியல் புறக்கணிப்புக்கு இனி இடமில்லை என்று பிரேசில் நம்புகிறது. தண்டனையிலிருந்து விலக்கு என்பது, சர்வதேச சட்ட பூர்வமான அமைப்புகளின் நம்பகத் தன்மையையும் மதிப் பையும் குறைக்கும்.
இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற் கும் தண்டிப்பதற்கும் உள்ள ஐ.நா. சரத்துக்களின் கீழ், தென்னாப்பிரிக்காவால் தொடுக்கப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக் கில் தமது தலையீட்டை சமர்ப்பிப்பதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக பிரேசில் அரசாங் கம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் பொது மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை நிகழ்வுகள், காசா பகுதிக்குப் மட்டு மல்ல, மேற்குக் கரை வரை நீட்டிக்கப்படுவது குறித்து பிரேசில் அரசாங்கம் ஆழ்ந்த கோபத்தை வெளிப் படுத்துகிறது.
காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பொதுமக்கள் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், போர் ஆயுதமாக பட்டினியை வெட்கமின்றிப் பயன்படுத்துவது உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.